இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
குன்ற வருப விடல்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய
செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும்
நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால்
குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர
வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச்
செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்
குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே
சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
பேராண்மை வேண்டு பவர்
மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும்
விரும்புகின்றவர்,
புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச்
செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
புகழுடன் தன் குடும்பப்
பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம்
குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை
விரும்புகிறவர்,
தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப்
புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
குறள் 963:
பெருக்கத்து வேண்டும்
பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
சுருக்கத்து வேண்டும் உயர்வு
மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள
காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும்
வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை
வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது
அடக்க உணர்வும்,
அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத
மான உணர்வும் வேண்டும்
குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர்
மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
நிலையின் இழிந்தக் கடை
மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு
உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற
மயிரினைப் போன்றவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை
விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.
கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தில்
உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து
உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்
குறள் 965:
குன்றின் அனையாரும்
குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
குன்றி அனைய செயின்
மு.வ உரை:
மலை போல் உயர்ந்த நிலையில்
உள்ளவரும்,
தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும்
தாழ்ந்து போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில்
பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும்
தாழ்ந்து போவார்.
கலைஞர் உரை:
குன்றினைப் போல் உயர்ந்து
கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து
குன்றிப் போய் விடுவார்கள்
குறள் 966:
புகழின்றால் புத்தேணாட்
டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை
றிகழ்வார்பின் சென்று நிலை
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின்
பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது,
தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
சாலமன் பாப்பையா உரை:
உயிர் வாழும் பொருட்டு
மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப்
புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு
என்னதான் தரும் அது?
கலைஞர் உரை:
இகழ்வதையும்
பொறுத்துக்கொண்டு,
மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ்
கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன்
வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
கெட்டான் எனப்படுதல் நன்று
மு.வ உரை:
மதியாதவரின் பின் சென்று
ஒருவன் உயிர்வாழ்வதை விட,
அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல்
நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
இகழுபவர் பின்னே சென்று
அவர் தரும் பொருளை,
பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று
சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின்
பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்
குறள் 968:
மருந்தோமற் றூனோம்பும்
வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
பீடழிய வந்த இடத்து
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன்
சிறப்புக்கெட நேர்ந்த போது,
அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பப் பெருமைக்கான
மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை
சாவாமைக்கு மருந்து ஆகுமோ?
கலைஞர் உரை:
சாகாமலே இருக்க மருந்து
கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை
மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது
இழிவான செயலாகும்
குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக்
கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
உயிர்நீப்பர் மானம் வரின்
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர்
நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை
விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
மயிர்எலாம் இழந்துவிட்டால்
உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய
நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.
கலைஞர் உரை:
உடலில் உள்ள உரோமம்
நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால்
உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்
குறள் 970:
இளிவரின் வாழாத மானம்
உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
ஒளிதொழு தேத்தும் உலகு
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு
நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி
நிற்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது
உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு
வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும்
போற்றி நிற்கும்
0 Comments