உடையர் எனப்படுவ தூக்கமஃ
தில்லார்
உடைய துடையரோ மற்று
உடைய துடையரோ மற்று
மு.வ உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார்
என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப்
பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் உடையவரே
எல்லாவற்றையும் உடையவர்;
ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
கலைஞர் உரை:
ஊக்கம் உடையவரே உடையவர்
எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
குறள் 592:
உள்ள முடைமை உடைமை
பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
நில்லாது நீங்கி விடும்
மு.வ உரை:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே
நிலையான உடைமையாகும்,
மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம்
உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
கலைஞர் உரை:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத்
தவிர,
வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது
குறள் 593:
ஆக்கம் இழந்தேமென்
றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
ஒருவந்தங் கைத்துடை யார்
மு.வ உரை:
ஊக்கத்தை உறுதியாகத்
தம்கைப் பொருளாக உடையவர்,
ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க
மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கத்தைத் தம் கைவசம்
கொண்டவர்,
செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று
மனம் கலங்க மாட்டார்.
கலைஞர் உரை:
ஊக்கத்தை உறுதியாகக்
கொண்டிருப்பவர்கள்,
ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க
மாட்டார்கள்
குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச்
செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
ஊக்க முடையா னுழை
மு.வ உரை:
சோர்வு இல்லாத ஊக்கம்
உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச்
சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது
தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
கலைஞர் உரை:
உயர்வு, உறுதியான
ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்
குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம்
மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
உள்ளத் தனைய துயர்வு
மு.வ உரை:
நீர்ப்பூக்களின் தாளின்
நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை
அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
சாலமன் பாப்பையா உரை:
நீர்ப்பூக்களின்
அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின்
அளவே.
கலைஞர் உரை:
தண்ணீரின் அளவுதான் அதில்
மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின்
உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்
குறள் 596:
உள்ளுவ தெல்லாம்
உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
மு.வ உரை:
எண்ணுவதெல்லாம்
உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு
எண்ணுவதை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
நினைப்பது எல்லாம் உயர்ந்த
நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால்
நிறைவேறாது போனாலும்,
பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது
நிறைவேறியதாகவே கருதப்படும்.
கலைஞர் உரை:
நினைப்பதெல்லாம் உயர்ந்த
நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை
விடக்கூடாது
குறள் 597:
சிதைவிடத் தொல்கார் உரவோர்
புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
பட்டுப்பா டூன்றுங் களிறு
மு.வ உரை:
உடம்பை மறைக்குமளவு
அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல்
ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அம்புகள் புதைந்து
புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல
ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை
நிலைநிறுத்துவர்.
கலைஞர் உரை:
உடல் முழுதும் அம்புகளால்
துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள்,
அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்
குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார்
உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
வள்ளியம் என்னுஞ் செருக்கு
மு.வ உரை:
ஊக்கம் இல்லாதவர்
இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை
அடையமாடடார்.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் இல்லாதவர்
பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
கலைஞர் உரை:
அள்ளி வழங்கும் ஆர்வம்
இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை
குறள் 599:
பரியது கூர்ங்கோட்ட
தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
வெரூஉம் புலிதாக் குறின்
மு.வ உரை:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக்
கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால்
அதற்கு அஞ்சும்.
சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும்
கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே
வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட
யானை,
தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்
குறள் 600:
உரமொருவற் குள்ள
வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
மரமக்க ளாதலே வேறு
மு.வ உரை:
ஒருவனுக்கு வலிமையானது
ஊக்க மிகுதியே,
அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்)
மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
சாலமன் பாப்பையா உரை:
ஊக்க மிகுதியே
ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ
வெறும் மரமே.
கலைஞர் உரை:
மனத்தில் உறுதியான
ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும்
அவர்களுக்கும் வேறுபாடு இல்லை
0 Comments