இறந்த வெகுளியின் தீதே
சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ உரை:
பெரிய உவகையால்
மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த
சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த மகிழ்ச்சிப்
பெருக்கால் வரும் மறதி,
அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
கலைஞர் உரை:
அகமகிழ்ச்சியினால்
ஏற்படும் மறதி,
அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது
குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும்
புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
மு.வ உரை:
நாள் தோறும் விடாமல் வரும்
வறுமை அறிவைக் கொல்வது போல,
ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நித்த வறுமை அறிவைக்
கொன்றுவிடுவது போல,
மறதி புகழைக் கெடுத்துவிடும்.
கலைஞர் உரை:
நாளும் தொடர்ந்து
வாட்டுகின்ற வறுமை,
அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து
விடும்
குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை
புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு
தெப்பானூ லோர்க்குந் துணிவு
மு.வ உரை:
மறதியால் சோர்ந்து
நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில்
எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறதியை உடையவர்க்குப்
புகழ் உடைமை இல்லை;
இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான
கருத்தாகும்.
கலைஞர் உரை:
மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ்
இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்
குறள் 534:
அச்ச முடையார்க் கரணில்லை
ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு
பொச்சாப் புடையார்க்கு நன்கு
மு.வ உரை:
உள்ளத்தில் அச்சம்
உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு
நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் பயம் உள்ளவர்க்கு
எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால்
பயன் இல்லை.
கலைஞர் உரை:
பயத்தினால்
நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண்
கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில்
இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை
குறள் 535:
முன்னுறக் காவா
திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்
பின்னூ றிரங்கி விடும்
மு.வ உரை:
வரும் இடையூறுகளை முன்னே
அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன்
பிழையை நினைத்து இரங்குவான்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் வரும் முன்பே
அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க
முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.
கலைஞர் உரை:
முன்கூட்டியே சிந்தித்துத்
தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன்
பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்
குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும்
என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்
வாயின் அதுவொப்ப தில்
மு.வ உரை:
யாரிடத்திலும்
எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு
ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடத்திலேனும் எப்போதும்
விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப்
போன்ற நன்மை வேறு இல்லை.
கலைஞர் உரை:
ஒருவரிடம், மறவாமை
என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட
அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது
குறள் 537:
அரியவென் றாகாத இல்லைபொச்
சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
கருவியாற் போற்றிச் செயின்
மு.வ உரை:
மறவாமை என்னும்
கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று
ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மறதி இல்லாத மனத்தால்
எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
கலைஞர் உரை:
மறதியில்லாமலும், அக்கறையுடனும்
செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச்
செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்
மு.வ உரை:
சான்றோர் புகழ்ந்து
சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு
ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் புகழ்ந்து
சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு
பிறப்பிலும் நன்மை இல்லை.
கலைஞர் உரை:
புகழுக்குரிய கடமைகளைப்
போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு
வாழ்க்கையில் உயர்வே இல்லை
குறள் 539:
இகழ்ச்சியிற் கெட்டாரை
உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
மு.வ உரை:
தாம் தம் மகிழ்ச்சியால்
செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த
காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை
பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை
நினைவிற் கொள்க.
கலைஞர் உரை:
மமதையால் பூரித்துப்போய்க்
கடமைகளை மறந்திருப்பவர்கள்,
அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத்
திருந்திக் கொள்ள வேண்டும்
குறள் 540:
உள்ளிய தெய்தல் எளிதுமன்
மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்
உள்ளிய துள்ளப் பெறின்
மு.வ உரை:
ஒருவன் எண்ணியதை விடாமல்
எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல்
எளிதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நினைத்ததைத் தொடர்ந்து
நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
கலைஞர் உரை:
கொண்ட குறிக்கோளில்
ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக்
குறிக்கோளை அடைவது எளிதானதாகும்
0 Comments