வினைவலியுந் தன்வலியும்
மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ உரை:
செயலின் வலிமையும் தன்
வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும்
ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்வதற்கு எண்ணும்
செயலின் வலிமை,
செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும்
எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும்
இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.
கலைஞர் உரை:
செயலின் வலிமை, தனது
வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும்
துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட
வேண்டும்
குறள் 472:
ஒல்வ தறிவ தறிந்ததன்
கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
செல்வார்க்குச் செல்லாத தில்
மு.வ உரை:
தனக்குப் பொருந்தும்
செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு
முடியாதது ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யமுடியும்
செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச்
செயலாற்றுவார்க்கு,
முடியாதது ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடும்போது
அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது
எதுவுமில்லை
குறள் 473:
உடைத்தம் வலியறியார்
ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
இடைக்கண் முரிந்தார் பலர்
மு.வ உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என
அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல்
அழிந்தவர் பலர்.
சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு
வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை
அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர்
உண்டு
குறள் 474:
அமைந்தாங் கொழுகான்
அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
வியந்தான் விரைந்து கெடும்
மு.வ உரை:
மற்றவர்களோடு ஒத்து
நடக்காமல்,
தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை
வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து
பழகாமல்,
தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில்
அழிவான்.
கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன்
வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்
படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்
குறள் 475:
பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
சால மிகுத்துப் பெயின்
மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே
ஆனாலும் ,
அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால்
அச்சு முறியும்.
சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை
அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
கலைஞர் உரை:
மயில் இறகாக
இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு
அதற்குப் பலம் வந்து விடும்
குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார்
அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
மு.வ உரை:
ஒரு மரத்தின்
நுனிக்கொம்பில் ஏறியவர்,
அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய
உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில்
ஏறிவிட்டவர்,
அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம்
முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.
கலைஞர் உரை:
தன்னைப்பற்றி அதிகமாகக்
கணக்குப் போட்டுக் கொண்டு,
எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில்
ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்
குறள் 477:
ஆற்றின் அளவறிந் தீக
அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
போற்றி வழங்கு நெறி
மு.வ உரை:
தக்க வழியில் பிறர்க்கு
கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி
இல்லாமல் மறைந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
எதைப் பிறர்க்குக்
கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக்
கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான
வழியாகும்.
கலைஞர் உரை:
வருவாய் அளவை அறிந்து, அதனை
வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்
குறள் 478:
ஆகா றளவிட்டி தாயினுங்
கேடில்லை
போகா றகலாக் கடை
போகா றகலாக் கடை
மு.வ உரை:
பொருள் வரும் வழி
(வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால்
அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது
என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
கலைஞர் உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல்
இருக்குமேயானால் வரவு,
குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை
குறள் 479:
அளவறிந்து வாழாதான்
வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
இல்லாகித் தோன்றாக் கெடும்
மு.வ உரை:
பொருளின் அளவு அறிந்து
வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் சொத்தின் மதிப்பை
அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து
இல்லாமல் அழிந்துவிடும்.
கலைஞர் உரை:
இருப்பது, இயற்றக்கூடியது,
இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை
வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல்
தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்
குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர
வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
வளவரை வல்லைக் கெடும்
மு.வ உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை
ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு
விரைவில் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
பொருளாதார நிலையை எண்ணாது
பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில்
கெடும்.
கலைஞர் உரை:
தன்னிடமுள்ள பொருளின் அளவை
ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம்
விரைவில் கெடும்
0 Comments