அறிவற்றங் காக்குங் கருவி
செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
உள்ளழிக்க லாகா அரண்
மு.வ உரை:
அறிவு அழிவு வராமல்
காக்கும் கருவியாகும்,
அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும்
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு நமக்கு அழிவு வராமல்
காக்கும் ஆயுதம்,
பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
கலைஞர் உரை:
பகையால் அழிவு வாராமல்
பாதுகாக்கும் அரண்,
அறிவு ஒன்றுதான்
குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா
தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
நன்றின்பா லுய்ப்ப தறிவு
மு.வ உரை:
மனத்தை சென்ற இடத்தில்
செல்லவிடாமல்,
தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே
அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் சென்ற வழியெல்லாம்
அதைச் செல்ல விடாமல்,
தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில்
நடத்துவது அறிவு.
கலைஞர் உரை:
மனம் போகும் வழியெல்லாம்
போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே
அறிவுடைமையாகும்
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
மெய்ப்பொருள் காண்ப தறிவு
மு.வ உரை:
எப்பொருளை யார் யார் இடம்
கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே
அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எந்தக் கருத்தை எவர்
சொன்னாலும்,
அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
கலைஞர் உரை:
எந்தவொரு பொருள்குறித்து
எவர் எதைச் சொன்னாலும்,
அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து
தெளிவதுதான் அறிவுடைமையாகும்
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித்
தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
நுண்பொருள் காண்ப தறிவு
மு.வ உரை:
தான் சொல்லுவன எளிய
பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின்
நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரிய கருத்துகளைக்கூடக்
கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும்
சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை
எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
கலைஞர் உரை:
நாம் சொல்ல வேண்டியவைகளை
எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான
கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்
குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம்
மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
கூம்பலு மில்ல தறிவு
மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரை
நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே
வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
சாலமன் பாப்பையா உரை:
உலகை நட்பாக்கிக் கொள்வது
அறிவு;
நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில்
வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
கலைஞர் உரை:
உயர்ந்தோரே உலகோர்
எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே
நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்
குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
டவ்வ துறைவ தறிவு
மு.வ உரை:
உலகம் எவ்வாறு
நடைபெறுகின்றதோ,
உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர்
எவ்வாறு வாழ்கின்றார்களோ,
அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது
அறிவு.
கலைஞர் உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம்
எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார்
அறிவிலார்
அஃதறி கல்லா தவர்
அஃதறி கல்லா தவர்
மு.வ உரை:
அறிவுடையோர்
எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர்
அதனை அறிய முடியாதவர்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவுடையார் நாளை வர
இருப்பதை முன் அறிய வல்லவர்;
அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
கலைஞர் உரை:
ஒரு விளைவுக்கு எதிர்
விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள்
சிந்திக்க மாட்டார்கள்
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை
அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
தஞ்சல் அறிவார் தொழில்
மு.வ உரை:
அஞ்சத்தக்கதைக் கண்டு
அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே
அறிவுடையவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டியதற்குப்
பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
கலைஞர் உரை:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச
வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்
குறள் 429:
எதிரதாக் காக்கும்
அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
அதிர வருவதோர் நோய்
மு.வ உரை:
வரப்போவதை முன்னே அறிந்து
காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக
வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளை வர இருப்பதை முன்னதாக
அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே
இல்லை.
கலைஞர் உரை:
வருமுன் அறிந்து
காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது
குறள் 430:
அறிவுடையார் எல்லா
முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்
என்னுடைய ரேனு மிலர்
மு.வ உரை:
அறிவுடையவர் (வேறொன்றும்
இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன
உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவரானாலும்
அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய்
இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
கலைஞர் உரை:
அறிவு இல்லாதவர்களுக்கு
வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு
எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை
0 Comments