படைகுடி கூழமைச்சு நட்பரண்
ஆறும்
உடையான் அரசரு ளேறு
உடையான் அரசரு ளேறு
மு.வ உரை:
படை குடி கூழ் அமைச்சு
நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம்
போனறவன்.
சாலமன் பாப்பையா உரை:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று
மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில்
உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே
அரசுகளில் சிங்கம் போன்றது.
கலைஞர் உரை:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த
குடிமக்கள், குறையா வளம், குறையற்ற
அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க
முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற
அரசாகும்
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம்
இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
எஞ்சாமை வேந்தற் கியல்பு
மு.வ உரை:
அஞ்சாமை, ஈகை ,
அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும்
குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அநீதிக்கும் பகைவர்க்கும்
பயப்படாதிருப்பது,
வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும்
முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் -
இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.
கலைஞர் உரை:
துணிவு, இரக்க
சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த
குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை
அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
நீங்கா நிலனாள் பவற்கு
மு.வ உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை,
துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு
நீங்காமல் இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு
இல்லாமை,
அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை
எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு
விலகக்கூடாது.
கலைஞர் உரை:
காலம் தாழ்த்தாத விரைவான
நடவடிக்கைகளும்,
அறிவுடைமையும், துணிவும்
நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல்
நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி
மறனிழுக்கா
மான முடைய தரசு
மான முடைய தரசு
மு.வ உரை:
ஆட்சி முறைக்கு உரிய
அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த
அரசன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குச் சொல்லப்பட்ட
அறத்திலிருந்து விலகாமல்,
அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.
கலைஞர் உரை:
அறநெறி தவறாமலும், குற்றமேதும்
இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும்
ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங்
காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
வகுத்தலும் வல்ல தரசு
மு.வ உரை:
பொருள் வரும் வழிகளை
மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை
வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழிகளை
உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல்
காப்பது, காத்தவற்றை அறம், பொருள்,
இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை
வகுத்து,
அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான
நல்லாட்சிக்கு இலக்கணமாகும்
குறள் 386:
காட்சி கெளியன்
கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
மீக்கூறும் மன்னன் நிலம்
மு.வ உரை:
காண்பதற்கு எளியவனாய்க்
கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம்
புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி வேண்டி வருபவர்
காண்பதற்கு எளியனாய்,
எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி
பெறும்தொகுதிகள் கூடும்)
கலைஞர் உரை:
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல்
கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க
வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
தான்கண் டனைத்திவ் வுலகு
மு.வ உரை:
இனியச் சொற்களுடன்
தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான்
கருதியபடி அமைவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய சொல்லுடன்
பிறர்க்குக் கொடுக்கவும்,
அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய
எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.
கலைஞர் உரை:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு
வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும்
மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
கிறையென்று வைக்கப் படும்
மு.வ உரை:
நீதி முறை செய்து
குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக்
கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதிவழங்கி மக்களைக்
காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
கலைஞர் உரை:
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக்
காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்
குறள் 389:
செவிகைப்பச்
சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
மு.வ உரை:
குறைகூறுவோறின் சொற்களைக்
செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம்
தங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இடித்துக் கூறும் தகுதி
மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக்
கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
கலைஞர் உரை:
காதைக் குடையக்கூடிய
கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு
இருக்கும்
குறள் 390:
கொடையளி செங்கோல்
குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
உடையானாம் வேந்தர்க் கொளி
மு.வ உரை:
கொடை, அருள்,
செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல்
ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப்
போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குத்
தேவையானவற்றைக் கொடுப்பது,
எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி
விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை
நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
கலைஞர் உரை:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை
வழங்கியும்,
நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை
தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர்
அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்
0 Comments