வாய்மை எனப்படுவ
தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்
தீமை யிலாத சொலல்
மு.வ உரை:
வாய்மை என்று கூறப்படுவது
எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு
சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்மை என்று சொல்லப்படுவது
எது என்றால், எவர்க்கும் எத்தகைய
தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
கலைஞர் உரை:
பிறருக்கு எள்முனையளவு
தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்
குறள் 292:
பொய்ம்மையும் வாய்மை
யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
நன்மை பயக்கு மெனின்
மு.வ உரை:
குற்றம் தீர்த்த நன்மையை
விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் அற்ற நன்மையைத்
தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
கலைஞர் உரை:
குற்றமற்ற நன்மையை
விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப்
பெற்றுவிடும்
குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க
பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சம்
அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய்
சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் என்று உள்ளம்
உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப்
பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.
கலைஞர் உரை:
மனச்சாட்சிக்கு எதிராகப்
பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா
தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
உள்ளத்து ளெல்லாம் உளன்
மு.வ உரை:
ஒருவன் தன் உள்ளம் அறியப்
பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம்
இருப்பவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறியப் பொய்
சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
கலைஞர் உரை:
மனத்தால்கூடப் பொய்யை
நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான
இடத்தைப் பெறுவார்கள்
குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின்
தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
தானஞ்செய் வாரின் தலை
மு.வ உரை:
ஒருவன் தன் மனதோடு பொருந்த
உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறிய உண்மை
பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக்
காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
கலைஞர் உரை:
உதட்டளவில் இன்றி உளமார
வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும்
செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்
குறள் 296:
பொய்யாமை யன்ன புகழில்லை
எய்யாமை
எல்லா அறமுந் தரும்
எல்லா அறமுந் தரும்
மு.வ உரை:
ஒருவனுக்கு பொய் இல்லாமல்
வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது
அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் இருப்பது
போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும்
தரும்.
கலைஞர் உரை:
பொய் இல்லாமல் வாழ்வது
போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும்
நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
செய்யாமை செய்யாமை நன்று
மு.வ உரை:
பொய்யாமை ஆகிய அறத்தை
உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் ஒருவன்
வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு
நல்லதாகிவிடும்.
கலைஞர் உரை:
செய்யக்கூடாததைச்
செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல்
கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்
குறள் 298:
புறந்தூய்மை நீரா னமையும்
அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்
வாய்மையால் காணப் படும்
மு.வ உரை:
புறத்தே தூய்மையாக
விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக
விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பு தண்ணீரால்
சுத்தமாகும்; உள்ளம் உண்மையால்
சுத்தமாகும்.
கலைஞர் உரை:
நீரில் குளிப்பதால் உடலின்
அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல்
தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும்
வாய்மை வேண்டும்
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல
சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
பொய்யா விளக்கே விளக்கு
மு.வ உரை:
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள்
எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து
இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும்
விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு
விளக்கு ஆகும்.
கலைஞர் உரை:
புறத்தின் இருளைப்
போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை
உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்
குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்று
ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
வாய்மையின் நல்ல பிற
மு.வ உரை:
யாம் உண்மையாக கண்ட
பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
சிறந்தவை என்று நான் கண்டு
அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும்
இல்லை.
கலைஞர் உரை:
வாய்மையைப் போல் சிறந்த
பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்
0 Comments