ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு
தூதிய மில்லை உயிர்க்கு
மு.வ உரை:
வறியவர்க்கு ஈதல் வேண்டும்
அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது
வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால்
புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு
ஒன்றும் இல்லை.
கலைஞர் உரை:
கொடைத் தன்மையும், குன்றாத
புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை
குறள் 232:
உரைப்பா ருரைப்பவை
யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்
றீவார்மேல் நிற்கும் புகழ்
மு.வ உரை:
புகழ்ந்து சொல்கின்றவர்
சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல்
நிற்கின்ற புகழேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை
என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.
கலைஞர் உரை:
போற்றுவோர்
போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்
குறள் 233:
ஒன்றா உலகத் துயர்ந்த
புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
பொன்றாது நிற்பதொன் றில்
மு.வ உரை:
உயர்ந்த புகழ் அல்லாமல்
உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய்
விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும்
வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.
கலைஞர் உரை:
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும்
இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின்
புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு
போற்றாது புத்தே ளுலகு
மு.வ உரை:
நிலவுலகின் எல்லையில்
நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்
செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
சாலமன் பாப்பையா உரை:
தன்னில் வாழும்அறிஞரைப்
போற்றாமல்,
இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
கலைஞர் உரை:
இனிவரும் புதிய உலகம்கூட
இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல்
உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது
குறள் 235:
நத்தம்போல் கேடும்
உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
வித்தகர்க் கல்லால் அரிது
மு.வ உரை:
புகழுடம்பு மேம்படுதலாகும்
வாழ்வில் கேடும்,
புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பூத உடம்பின் வறுமையைப்
புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத்
தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம்
மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி
மற்றவர்க்கு ஆவது கடினம்.
கலைஞர் உரை:
துன்பங்களுக்கிடையேகூட
அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது
சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்
குறள் 236:
தோன்றின் புகழோடு தோன்றுக
அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
தோன்றலின் தோன்றாமை நன்று
மு.வ உரை:
ஒரு துறையில் முற்பட்டுத்
தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர்
அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் அறியுமாறு
அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக்
காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
கலைஞர் உரை:
எந்தத் துறையில்
ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில்
ஈடுபடாமல் இருப்பதே நல்லது
குறள் 237:
புகழ்பட வாழாதார்
தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்
இகழ்வாரை நோவ தெவன்
மு.வ உரை:
தமக்குப் புகழ்
உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை
நொந்து கொள்ளக் காரணம் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
புகழ் பெருகுமாறு
வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை
இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?
கலைஞர் உரை:
உண்மையான புகழுடன் வாழ
முடியாதவர்கள்,
அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை
இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?
குறள் 238:
வசையென்ப வையத்தார்க்
கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்
எச்சம் பெறாஅ விடின்
மு.வ உரை:
தமக்குப் பின் எஞ்சி
நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி
என்று சொல்லுவர்.
சாலமன் பாப்பையா உரை:
புகழ் என்னும் பெரும்
செல்வத்தைப் பெறாது போனால்,
இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
கலைஞர் உரை:
தமக்குப் பிறகும் எஞ்சி
நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த
பழியென்று வையம் கூறும்
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும்
இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
யாக்கை பொறுத்த நிலம்
மு.வ உரை:
புகழ் பெறாமல் வாழ்வைக்
கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு
இல்லாமல் குன்றிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
புகழ் இல்லாத உடம்பைச்
சுமந்த பூமி,
தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
கலைஞர் உரை:
புகழ் எனப்படும் உயிர்
இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத
நிலமாகக் கருதப்படும்
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே
வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
வாழ்வாரே வாழா தவர்
மு.வ உரை:
தாம் வாழும் வாழ்க்கையில்
பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல்
வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
சாலமன் பாப்பையா உரை:
தம்மீது பழி இன்றிப்
புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு
வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
கலைஞர் உரை:
பழி உண்டாகாமல் வாழ்வதே
வாழ்க்கை எனப்படும்,
புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்
0 Comments