வாளற்றுப் புற்கென்ற
கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
நாளொற்றித் தேய்ந்த விரல்
மு.வ உரை:
என் கண்களும் அவர் வரும்
வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும்
அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்து போன
நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர்
வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக்
காணும் திறனில் குறைந்து விட்டன.
கலைஞர் உரை:
வருவார் வருவார் என வழி
பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள
நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து
விரல்களும் தேய்ந்தன
குறள் 1262:
இலங்கிழாய் இன்று
மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து
கலங்கழியும் காரிகை நீத்து
மு.வ உரை:
தோழி! காதலரின்
பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு
கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிரும் நகை அணிந்தவனே!
என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும்
வளையல்களை இழக்கும்.
கலைஞர் உரை:
காதலரைப் பிரிந்திருக்கும்
நான்,
பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது
உறுதியடி என் தோழி
குறள் 1263:
உரன்நசைஇ உள்ளம் துணையாகச்
சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
வரல்நசைஇ இன்னும் உளேன்
மு.வ உரை:
வெற்றியை விரும்பி ஊக்கமே
துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண
விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
சாலமன் பாப்பையா உரை:
என்னுடன் இன்பம் நுகர்வதை
விரும்பாமல்,
நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி,
வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு
காலமும் இருக்கிறேன்.
கலைஞர் உரை:
ஊக்கத்தையே உறுதுணையாகக்
கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான்
என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்
குறள் 1264:
கூடிய காமம் பிரிந்தார்
வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு
கோடுகொ டேறுமென் நெஞ்சு
மு.வ உரை:
முன்பு கூடியிருந்த
காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின்
கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிந்து போனவர்
மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை
விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
கலைஞர் உரை:
காதல் வயப்பட்டுக்
கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின்
உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது
குறள் 1265:
காண்கமன் கொண்கனைக்
கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு
நீங்குமென் மென்தோள் பசப்பு
மு.வ உரை:
என் காதலரைக் கண்ணாரக்
காண்பேனாக;
கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே
நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் முழுக்க என்
கணவரை நான் காண்பேனாகுக;
அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
கலைஞர் உரை:
கண்ணார என் கணவனைக்
காண்பேனாக;
கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்
குறள் 1266:
வருகமன் கொண்கண் ஒருநாட்
பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
பைதல்நோய் எல்லாம் கெட
மு.வ உரை:
என் காதலன் ஒருநாள்
என்னிடம் வருவானாக;
வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம்
தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலன் ஒருநாள்
என்னிடம் வருவானாக;
வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம்
தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
கலைஞர் உரை:
என்னை வாடவிட்டுப்
பிரிந்துள்ள காதலன்,
ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும்
தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்
குறள் 1267:
புலப்பேன்கொல் புல்லுவேன்
கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்
கண்ணன்ன கேளிர் வரின்
மு.வ உரை:
என்னுடைய கண்போன்ற காதலர்
வருவாரானால்,
யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ?
அவரோடு கூடுவேனோ?
சாலமன் பாப்பையா உரை:
கண்போல் சிறந்த என்
துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர்
பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு
செயல்களையும் கலந்து செய்வேனா?
கலைஞர் உரை:
கண்ணின் மணியாம் என்
காதலர் வந்தவுடன்,
பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ?
அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது
ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே
புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது
குறள் 1268:
வினைகலந்து வென்றீக
வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
மாலை அயர்கம் விருந்து
மு.வ உரை:
அரசன் இச் செயலில்
முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு
வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.
சாலமன் பாப்பையா உரை:
அரசு போர் செய்து வெற்றி
பெறட்டும்;
நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.
கலைஞர் உரை:
தலைவன், தான்
மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என்
மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்
குறள் 1269:
ஒருநாள் எழுநாள்போல்
செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
மு.வ உரை:
தொலைவில் உள்ள
வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு
ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.
சாலமன் பாப்பையா உரை:
தொலைதூரம் சென்று தன்
கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத்
தோன்றும்.
கலைஞர் உரை:
நெடுந்தொலைவு சென்ற காதலர்
திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத்
தோன்றும்
குறள் 1270:
பெறினென்னாம் பெற்றக்கால்
என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
உள்ளம் உடைந்துக்கக் கால்
மு.வ உரை:
துன்பத்தைத் தாங்காமல்
மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன?
பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும்
என்ன?
சாலமன் பாப்பையா உரை:
என் பிரிவைத் தாங்காமல்
உள்ளம் உடைய,
அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது
என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு
கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
கலைஞர் உரை:
துன்பத்தைத் தாங்கிக்
கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர்
திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?
0 Comments