கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ
தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
தாங்காட்ட யாங்கண் டது
மு.வ உரை:
தீராத இக்காமநோய், கண்கள்
காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல்
துன்பத்தால் வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை:
தணியாத காதல் துன்பத்தை
நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது
அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?
கலைஞர் உரை:
கண்கள் செய்த
குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக்
காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?
குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய
உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்
பைதல் உழப்ப தெவன்
மு.வ உரை:
ஆராய்ந்து உணராமல் அன்று
நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால்
வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை:
வரப்போவதை அறியாமல் அன்று
அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது;
நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல்
துன்பப்படுகின்றனவே எதற்காக?
கலைஞர் உரை:
விளைவுகளை உணராமல் மயங்கி
நோக்கிய மைவிழிகள்,
இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது
தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?
குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே
கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
இதுநகத் தக்க துடைத்து
மு.வ உரை:
அன்று காதலரைக் கண்கள்
தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை
உடையது.
சாலமன் பாப்பையா உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப்
பார்த்துவிட்டு,
இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால்
சிரிப்புத்தான் வருகிறது.
கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று
அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க
ஒன்றாகும்
குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண்
உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
உய்வில்நோய் என்கண் நிறுத்து
மு.வ உரை:
என் கண்கள், தப்பிப்
பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
சாலமன் பாப்பையா உரை:
மை தீட்டப்பட்ட இந்தக்
கண்கள் நான் தப்பிக்கவும்,
வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ
முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.
கலைஞர் உரை:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத
காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும்
அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன
குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும்
கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்
காமநோய் செய்தவென் கண்
மு.வ உரை:
அன்று கடலும் தாங்கமுடியாத
காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால்
வருந்துகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
கடலைவிடப் பெரிதாகும்
காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
கலைஞர் உரை:
கடல் கொள்ளாத அளவுக்குக்
காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல்
துன்பத்தால் வாடுகின்றன
குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந் நோய்
செய்தகண்
தாஅம் இதற்பட் டது
தாஅம் இதற்பட் டது
மு.வ உரை:
எமக்கு இந்தக்
காமநோயைஉண்டாக்கிய கண்கள்,
தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
சாலமன் பாப்பையா உரை:
எனக்கு இந்தக் காதல்
துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
கலைஞர் உரை:
ஓ! என் காதல் நோய்க்குக்
காரணமான கண்கள்,
என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக
விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
வேண்டி அவர்க்கண்ட கண்
மு.வ உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து
காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும்
அற்றுப் போகட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
விரும்பி மகிழ்ந்து
விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி
வருந்தி வற்றிப் போகட்டும்!
கலைஞர் உரை:
அன்று, இழைந்து
குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக்
தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும்
துன்பப்படுங்கள்
குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ
மற்றவர்க்
காணா தமைவில கண்
காணா தமைவில கண்
மு.வ உரை:
உள்ளத்தால் விரும்பாமலே
சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக்
காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்தால் என்னை
விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால்,
அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
கலைஞர் உரை:
என்னை அரவணைக்கும்
எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என்
கண்களுக்கு அமைதியில்லையே!
குறள் 1179:
வாராக்கால் துஞ்சா
வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
ஆரஞர் உற்றன கண்
மு.வ உரை:
காதலர் வாராவிட்டால்
தூங்குவதில்லை;
வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என்
கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வராதபோது வரவை
எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று
அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத்
தூங்க முடியாத துன்பந்தான்.
கலைஞர் உரை:
இன்னும் வரவில்லையே என்பதாலும்
தூங்குவதில்லை;
வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை
அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்
குறள் 1180:
மறைபெறல் ஊராhக்
கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
அறைபறை கண்ணார் அகத்து
மு.வ உரை:
அறையப்படும் பறைபோல்
துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான
செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
சாலமன் பாப்பையா உரை:
அடிக்கப்படும் பறைபோன்று
மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை
அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
கலைஞர் உரை:
காதல் வேதனையைப்
பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம்
மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல
0 Comments