செல்லாமை உண்டேல் எனக்குரை
மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
வல்வரவு வாழ்வார்க் குரை
மு.வ உரை:
பிரிந்து செல்லாத நிலைமை
இருந்தால் எனக்குச் சொல்,
பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ
வல்லவர்க்குச் சொல்.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிவதில்லை
என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு
இருப்பார்களே அவர்களிடம் சொல்.
கலைஞர் உரை:
பிரிந்து
செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர
வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம்
இப்போது விடைபெற்றுக் கொள்
குறள் 1152:
இன்கண் உடைத்தவர் பார்வல்
பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு
புன்கண் உடைத்தால் புணர்வு
மு.வ உரை:
அவருடைய பார்வை முன்பு
இன்பம் உடையதாக இருந்தது,
இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் பார்வை எனக்கு
மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து
கொண்டிருக்கிறதே!
கலைஞர் உரை:
முன்பெல்லாம் அவரைக்
கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால்
துன்பமல்லவா வருத்துகிறது!
குறள் 1153:
அரிதரோ தேற்றம் அறிவுடையார்
கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்
பிரிவோ ரிடத்துண்மை யான்
மு.வ உரை:
அறிவுடைய காதலரிடத்தும்
பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை
நம்பித் தெளிவது அரிது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாம் அறியும் ஆற்றல்
உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும்
அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
கலைஞர் உரை:
பிரிவுத் துன்பத்தை
அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்''
என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது
குறள் 1154:
அளித்தஞ்சல் என்றவர்
நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு
தேறியார்க் குண்டோ தவறு
மு.வ உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச
வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை
நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது
அன்பு காட்டிப் பயப்படாதே,
உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை,
நான் நம்பியது தவறோ?
கலைஞர் உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே
எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை
நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?
குறள் 1155:
ஓம்பின் அமைந்தார்
பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு
நீங்கின் அரிதால் புணர்வு
மு.வ உரை:
காத்துக் கொள்வதானால்
காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால்
மீண்டும் கூடுதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால்
அதைக் காப்பதற்கு உரிய அவர்,
என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால்
நான் இனி அவரைச் சேர்வது அரிது.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து சென்றால்
மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல்
முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்
குறள் 1156:
பிரிவுரைக்கும் வன்கண்ணர்
ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை
நல்குவர் என்னும் நசை
மு.வ உரை:
பிரிவைப்பற்றி
தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து
அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.
சாலமன் பாப்பையா உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப்
போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர்
பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு
பயனற்றது.
கலைஞர் உரை:
போய் வருகிறேன் என்று
கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என
ஆவல் கொள்வது வீண்
குறள் 1157:
துறைவன் துறந்தமை
தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
இறைஇறவா நின்ற வளை
மு.வ உரை:
என் மெலிவால் முன் கையில்
இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப்
பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய
திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத்
தெரிவிக்க மாட்டாவோ?
கலைஞர் உரை:
என்னை விட்டுத் தலைவன்
பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல்
ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!
குறள் 1158:
இன்னா தினன்இல்லூர்
வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு
இன்னா தினியார்ப் பிரிவு
மு.வ உரை:
இனத்தவராக நம்மேல்
அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை
விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே
வாழ்வது கொடுமை;
என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
கலைஞர் உரை:
நம்மை உணர்ந்து அன்பு
காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது
இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது
குறள் 1159:
தொடிற்சுடின் அல்லது
காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
மு.வ உரை:
நெருப்பு, தன்னைத்
தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது
சுடவல்லதாகுமோ.
சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான்
சுடும்;
காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் காணாமலும்
தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற
நிலை நெருப்புக்கு இல்லை;
நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
குறள் 1160:
அரிதாற்றி அல்லல்நோய்
நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்
பின்இருந்து வாழ்வார் பலர்
மு.வ உரை:
பிரிய முடியாத பிரிவிற்கு
உடன்பட்டு,(
பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு
பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
சாலமன் பாப்பையா உரை:
சம்பாதிப்பதற்குக் கணவன்
பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும்,
விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும்
பெண்கள் பலர் இருக்கின்றனர்.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து
செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக்
கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர்
பலர் இருக்கலாம்; ஆனால் நான்?
0 Comments