இருநோக் கிவளுண்கண் உள்ள
தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
மு.வ உரை:
இவளுடைய மை தீட்டிய
கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய்
செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளின் மையூட்டப்பட்ட
கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம்
தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
கலைஞர் உரை:
காதலியின் மைதீட்டிய
கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத்
தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும்
பார்வை
குறள் 1092:
கண்களவு கொள்ளும்
சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
செம்பாகம் அன்று பெரிது
மு.வ உரை:
கண்ணால் என்னை நோக்கிக்
களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப்
பெரிய பகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைக்
களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி
அன்று அதற்கு மேலாம்.
கலைஞர் உரை:
கள்ளத்தனமான அந்தக்
கடைக்கண் பார்வை,
காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!
குறள் 1093:
நோக்கினாள் நோக்கி
இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
யாப்பினுள் அட்டிய நீர்
மு.வ உரை:
என்னை நோக்கினாள், யான்
கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும்
அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்காதபோது, என்னைப்
பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
கலைஞர் உரை:
கடைக்கண்ணால் அவள் என்னைப்
பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது
கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது
குறள் 1094:
யானோக்கும் காலை
நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
தானோக்கி மெல்ல நகும்
மு.வ உரை:
யான் நோக்கும் போது அவள்
நிலத்தை நோக்குவாள்,
யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நான் அவளை பார்க்கும்போது
தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல
தனக்குள்ளே சிரிப்பாள்.
கலைஞர் உரை:
நான் பார்க்கும்போது
குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத்
தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும்
குறிப்பல்லவா?
குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை
அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
சிறக்கணித்தாள் போல நகும்
மு.வ உரை:
என்னை நேராகக் குறித்துப்
பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப்
பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நேரே பார்க்காமல் ஒரு
கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு
தனக்குள் தானே மகிழ்வாள்.
கலைஞர் உரை:
அவள் என்னை நேராக உற்றுப்
பார்க்கவில்லையே தவிர,
ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு
தனக்குள் மகிழ்கிறாள்
குறள் 1096:
உறாஅ தவர்போற் சொலினும்
செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
ஒல்லை உணரப் படும்
மு.வ உரை:
புறத்தே அயலார் போல்
அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது
விரைவில் அறியப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
(பேசினேன்)
அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
கலைஞர் உரை:
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில்
அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி
அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்
குறள் 1097:
செறாஅச் சிறுசொல்லும்
செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
மு.வ உரை:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்
போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின்
குறிப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
(ஆம்.
இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர்
போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும்
அடையாளங்கள்.
கலைஞர் உரை:
பகையுணர்வு இல்லாத
கடுமொழியும்,
பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில்
அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும்
குறிப்புகளாகும்
குறள் 1098:
அசையியற் குண்டாண்டோர்
ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
பசையினள் பைய நகும்
மு.வ உரை:
யான் நோக்கும் போது
அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய
அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
யாரோ எவரோ போல அவள் பேசிய
பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல
சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு
இருப்பது தெரிகிறது.
கலைஞர் உரை:
நான் பார்க்கும் போது என்
மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்
குறள் 1099:
ஏதிலார் போலப் பொதுநோக்கு
நோக்குதல்
காதலார் கண்ணே உள
காதலார் கண்ணே உள
மு.வ உரை:
புறத்தே அயலார்போல்
அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம்
உள்ள இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக
பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.
கலைஞர் உரை:
காதலர்களுக்கு ஓர் இயல்பு
உண்டு;
அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர்
அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்
குறள் 1100:
கண்ணொடு கண்இணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
என்ன பயனும் இல
மு.வ உரை:
கண்களோடு கண்கள் நோக்காமல்
ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
காதலரில் ஒருவர் கண்ணோடு
மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு
பயனும் இல்லை.
கலைஞர் உரை:
ஒத்த அன்புடன் கண்களோடு
கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப்
போகின்றன
0 Comments